விரைவில் குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப் பணிகள் : 10.5 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு : ஒப்பந்தம் கைச்சாத்து - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

விரைவில் குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப் பணிகள் : 10.5 மில்லியன் டொலர் நிதி ஒதுக்கீடு : ஒப்பந்தம் கைச்சாத்து

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட சுமார் ஒரு இலட்சம் மக்கள் போக்குவரத்து மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தும் குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்காக 10.5 மில்லியன் டொலர் நிதித் தொகை ஒதுக்கப்படவுள்ளது.

பேராதனை மற்றும் பதுளை, செங்கலடி வீதியின் புனரமைப்பு பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பணத் தொகையில் எஞ்சிய பணத் தொகையை இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ஒதுக்கப்படுவதற்கான திருத்தப்பட்ட ஒப்பந்தம், நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் (சட்ட) அப்துல் மொசன் ஏ. அல்முல்லா ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.

இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தம் மூலம் பதுளை, செங்கலடி வீதி அபிவிருத்தித் திட்டத்தில் எஞ்சிய பணம் வீதி வலையமைப்பு அபிவிருத்தி பணிகளுக்கு மாற்றப்பட்டு, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த பாலம் நிர்மாணிக்கப்படுவதால் அவ்வீதியூடான போக்குவரத்து பிரச்சினைகள் முடிவுக்குவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment