உன்னிச்சை குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 22, 2025

உன்னிச்சை குளத்தின் 4 வான் கதவுகள் திறப்பு ! மக்களே அவதானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம் இன்று புதன்கிழமை (22) காலை 7 மணி வரையில் 31 அடி 8 அங்குலமாக உயர்ந்திருந்தது.

இதனால் அக்குளத்தின் 4 வான் கதவுகள் 5 அங்குலம் உயரத்துக்கு இன்று திறந்துவிடப்பட்டதாக உன்னிச்சை குளத்தின் திட்ட முகாமையாளர் செ.மேகநாதன் தெரிவித்தார்.

இதனால் செக்கனுக்கு 3425 கன அடி நீர் வெளியேற்றப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் குளத்தை அண்மித்த தாழ் நிலங்கள் பாரியளவு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன,

இதனால் உன்னிச்சை குளத்தை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நவகிரி குளத்தின் நீர் மட்டம் 30 அடி 9 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர் மட்டம் 16 அடி 10 அங்குலம், வாகனேரி குளத்தின் நீர் மட்டம் 19 அடி 7 அங்குலம், வடமுனைக் குளத்தின் நீர் மட்டம் 12 அடி 8 அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர் மட்டம் 15 அடி 5 அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர் மட்டம் 12 அடி அளவுகளுக்கு உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment