உயிருக்காகப் போராடிய யானை உயிரிழந்தது - News View

About Us

About Us

Breaking

Sunday, December 29, 2024

உயிருக்காகப் போராடிய யானை உயிரிழந்தது

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் வயல் பிரதேசத்தில் நோயினால் பாதிக்கப்பட்ட யானை ஒன்று உயிருக்கு போராடிய நிலையில் இன்று (29) மாலை உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் அடம்படிவட்டுவான் பகுதியில் விவசாயி ஒருவரது வயற்பிரதேசத்தில் குறித்த யானை எழுந்து நடக்க முடியாத நிலையில் காணப்பட்டதுடன், அப்பகுதி விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த யானையைப் பார்வையிட்டதுடன் அதற்கான முதலுதவிகளை வழங்கினர். 
அத்துடன், யானையின் நிலவரம் தொடர்பாக அம்பாறை வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களுக்கு அறிவிக்கப்படடிருந்த நிலையில், இன்று மாலை யானை உயிரிழந்துள்ளது.

குறித்த யானை பத்து வயது தொடக்கம் பதினைந்து வயதுக்குள் இருக்கலாம் என கிரான் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் கணிக்கப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் கல்குடா அனர்த்த அவசர உதவிச்சேவை மற்றும் அகீல் அவசர எமேர்ஜென்ஸி என்பவற்றின் உறுப்பினர்கள் உதவிகளைச் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment