மின்சாரம் தாக்கி மூவர் பலி - News View

About Us

About Us

Breaking

Sunday, December 29, 2024

மின்சாரம் தாக்கி மூவர் பலி

புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் இன்று (29) மாலை மின்சாரம் தாக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தில் பலஞ்சியின் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனை தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.

இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார். எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்தனர்.

2ஆம் கட்டை பிரதேசத்தைச் சேர்ந்த மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக புத்தளம் தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment