பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் மொஹமட் சாலி நழீம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, December 3, 2024

பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் மொஹமட் சாலி நழீம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மொஹமட் சாலி நழீம் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.

கடந்த நவம்பர் 21 ஆம் திகதி 10ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இடம்பெற்றதுடன், அன்றையதினம் புதிய உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்தனர். 

அதுவரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கான பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருக்கவில்லை.

கடந்த 22 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் தேசியப்பட்டியல் உறுப்பினராக மொஹமட் சாலி நழீமின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானியில் வெளியிட்டது.

அதற்கமைய அவர் இன்று பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதற்கு முன்னர் அவர் ஏறாவூர் நகர சபையின் தவிசாளராகப் பணியாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment