இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நியூஸிலாந்தின் மவுன்ட் மவுங்கானுயில் நேற்றிரவு (29) இடம்பெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை பெற்றது.
அவ்வணி சார்பில் ஆகக் கூடுதலாக டெரில் மிச்சல் 62 (42) ஓட்டங்களையும், மைக்கல் பிரேஸ்வல் 59 (33) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணி சார்பில் பினுர பெனாண்டோ, மஹீஷ் தீக்ஷண, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுகளை கைப்பறினர்.
அந்த வகையில் 173 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இலங்கை அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான பெத்தும் நிஸ்ஸங்க 90 (60) ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 46 (36) ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். அடுத்தபடியாக பினுர பெனாண்டோ 8 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
அதற்கமைய அணியின் ஏனைய வீரர்கள் 10 இற்கும் குறைந்த ஓட்டங்களையே பெற்று ஆட்டமிழந்தனர்.
நியூஸிலாந்து அணி சார்பில் ஜெகொப் டfப்பி 3 விக்கெட்டுகளையும், மேட் ஹென்றி, ஷக்கரி பௌல்க்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
அந்த வகையில் சுற்றுலா இலங்கை அணியுடனான 3 போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாளை இதே அரங்கில் இரவு நேரப் போட்டியாக தொடரின் 2ஆவது ரி20 போட்டி இடம்பெறவுள்ளது.
No comments:
Post a Comment