அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோருக்கான உதவித் தொகையை இன்று (22) முதல் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்பிலிட நலன்புரி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி இன்று முதல் முதியோர் கொடுப்பனவாக 3,000 ரூபாவை வைப்பிலிடப்படவுள்ளது.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் 5 இலட்சத்து 11 ஆயிரத்து 86 பேருக்கு இத்தொகையை வழங்க அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment