பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு : அரசியலுக்கு வருவாரா என்பதற்கும் வைத்தியர் ஷாபி பதில் - News View

About Us

About Us

Breaking

Thursday, November 7, 2024

பொய்யான குற்றச்சாட்டின் பின்னணியில் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு : அரசியலுக்கு வருவாரா என்பதற்கும் வைத்தியர் ஷாபி பதில்

தனக்கு எதி­ராக எந்த அடிப்­ப­டையும் இல்­லாமல் கருத்­தடை குற்றச்சாட்­டினை முன்வைத்து இன­வா­தத்தை தூண்டி, தனது வாழ்வை சீர­ழித்த பொலிஸ், அதி­கா­ரிகள், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்கப்போவ­தாக வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் அறி­வித்தார்.

கருத்­தடை குற்­றச்­சாட்­டி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்ட பின்னர், குருணாகல் நீதி­மன்ற கட்­டிடத் தொகு­திக்கு முன்­பாக ஊடகவியலாளர்­களிடம், தனது சட்­டத்­த­ரணி மைத்­திரி குண­ரத்ன சகிதம் பேசும்போதே அவர் இதனை தெரி­வித்தார்.

இனி மேல், தன்னை போல எவரும் பழி­வாங்­க­லுக்கு, இன­வா­தத்­துக்கு இரை­யாகக் கூடாது என்­ப­தற்­காக இந்த சட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க எதிர்­பார்ப்­ப­தாக வைத்­தியர் ஷாபி குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, தான் ஒரு அரச உத்­தி­யோ­கத்தர் எனும் ரீதியில் அரசியலில் ஈடு­பட எந்த எதிர்­பார்ப்பும் இல்லை எனவும், தற்­போது நாட்டில் ஏற்­பட்­டுள்ள மாற்றம் தனக்­கான நீதியை பெற்றுத் தந்த்துள்ள நிலையில், இந்த நல்ல மாற்றம் தொடர வேண்டும் என வைத்­தியர் ஷாபி கூறினார்.

அத்­துடன் தன் மீது அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்கப்­பட்­டாலும், தனக்­காக குரல் கொடுத்த ஊடகவியலாளர்கள், சட்­டத்­த­ர­ணிகள், அர­சியல் தலை­மை­க­ளுக்கும், குறிப்­பாக ஜனா­தி­ப­திக்கும் அவர் நன்றி தெரி­வித்தார்.

இத­னி­டையே, எதிர்­வரும் ஒரு வாரத்­துக்குள், அடிப்­ப­டை­யற்ற குற்றச்சாட்­டுக்­களை முன்வைத்து, இன­வா­தத்தை அர­சியல் தேவைக­ளுக்­காக விதைத்த அனை­வ­ருக்கும் எதிராக சட்ட நடவடிக்கைகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்படும் என வைத்தியர் ஷாபியின் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குறிப்பிட்டார்.

Vidivelli

No comments:

Post a Comment