அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி - விவசாயத்துறை அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Friday, November 22, 2024

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி - விவசாயத்துறை அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதிக்கான கூட்டு அமைச்சரவைப்பத்திரத்தை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிப்போம். பண்டிகை காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என விவசாயம், கால்நடை, நீர்ப்பாசனம் மற்றும் காணி அமைச்சர் கே.டி.லால் காந்த தெரிவித்தார்.

விவசாயத்துறை அமைச்சின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சந்தையில் நாட்டு வகை அரிசிக்கு நிலவும் தட்டுப்பாடு மற்றும் விலை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அரிசி தட்டுப்பாட்டுக்கு குறுகிய கால தீர்வாக இந்தியாவில் இருந்து முதற்கட்டமாக 70 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான கூட்டு அமைச்சுப்பத்திரத்தை எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிப்போம்.

அரிசி இறக்குமதி செய்வதால் தேசிய விவசாயிகளும், நுகர்வோரும் பாதிக்கப்படப் போவதில்லை. இடைத்தரகர்களின் முறையற்ற செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. தேசிய மட்டத்தில் விவசாயத்துறையை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

விவசாயிகளுக்கான நிவாரண கொடுப்பனவு தடையின்றி வழங்கப்படும். அரசியலில் தோல்வியடைந்துள்ள தரப்பினர் வெறும் விமர்சனங்களை மாத்திரம் முன்வைத்துக் கொள்கிறார்கள். போலியான குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்றார்.

No comments:

Post a Comment