நாட்டில் 37 குளங்களின் வான் கதவுகள் திறப்பு...! - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 27, 2024

நாட்டில் 37 குளங்களின் வான் கதவுகள் திறப்பு...!

நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டிலுள்ள 73 பிரதான குளங்களில் 37 குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் ஆறுகளை அண்டியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தெதுறு ஓயா நீர்த் தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் நிக்கவரட்டிய, சிலாபம், ஆராச்சிகட்டுவ, பிங்கிரிய, வாரியாபொல, கொபெய்கனே உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 20 மாவட்டங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி அந்த மாவட்டங்களின் 166 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 80,642 குடும்பங்கள் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 276,550 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,305 குடும்பங்களைச் சேர்ந்த 16,553 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment