நாட்டில் சீரற்ற வானிலையால் 13 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு ! - News View

About Us

Add+Banner

Thursday, November 28, 2024

demo-image

நாட்டில் சீரற்ற வானிலையால் 13 பேர் பலி : 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களிலும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்தங்களில் சிக்கி இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மழை, வெள்ளம் போன்ற அனர்த்தங்களால் ஒரு இலட்சத்து 13 ஆயிரத்து 52 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 77 ஆயிரத்து 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்த அனர்த்தத்தில் 91 வீடுகள் முழுமையாகவும், 1662 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

நாடளாவிய ரீதியில் 311 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த முகாம்களில் 10 ஆயிரத்து 431 குடும்பங்களைச் சேர்ந்த 32 ஆயிரத்து 695 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *