களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைநீடிப்பு ! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் - News View

About Us

About Us

Breaking

Sunday, October 13, 2024

களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கைநீடிப்பு ! அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தல்

களனி கங்கைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்படும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், களனி கங்கைக்கு அண்மித்த தாழ்நிலங்களில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு குறித்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி, தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சீதாவக்கை, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட களனி கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வழியாகச் செல்லும் சாரதிகளை திணைக்களம் கோருகிறது.

No comments:

Post a Comment