பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பில் போலியான தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட தந்தை மற்றும் மகன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரும் அவரது 30 வயதுடைய மகனும் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 27ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார்.
குறித்த நபரால் விமான நிலைய முகாமையாளருக்கும், விமான நிறுவனத்துக்கும் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அழைப்பிற்கு பிறகு, விமான நிலைய செயல்பாடுகள் தடைபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் விமான நிலையமும் பயணிகளும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதோடு, விமானங்கள் தாமதமாகியதாக தெரியவந்துள்ளது.
No comments:
Post a Comment