அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பதவியில் இருந்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment