இலங்கையில் கைப்பற்றப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, October 12, 2024

இலங்கையில் கைப்பற்றப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள்

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நச்சுத்தன்மை வாய்ந்த டின் மீன்கள் சுங்கத் திணைக்களத்தால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருகொடவத்தை சுங்க முனைய களஞ்சியசாலையிலிருந்து நேற்று (11) இவை கண்டுபிடிக்கப்பட்டன.

மீட்கப்பட்ட டின் மீன்களின் மொத்த பெறுமதி சுமார் 02 இலட்சத்து 15,000 அமெரிக்க டொலருக்கு இவை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இந்த டின் மீன்கள் சுற்றாடல், வனஜீவராசிகள், வள வனங்கள், நீர் வழங்கல், பெருந்தோட்டத்துறை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தியினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

பிரபாத் சந்திரகீர்த்தி இது தொடர்பில் தெரிவிக்கையில், இந்த நச்சுத்தன்மை மிக்க டின் மீன் தொகைகளானது கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு கிலோ கிராம் ரின்மீனில் ஆசனிக் அமிலமானது ஒரு கிராம் அல்லது அதற்கு குறைவான அளவில் காணப்பட வேண்டிய போதிலும் குறித்த டின் மீன் தொகையில் 1.3 கிராம் அளவில் ஆசனிக் அமிலம் காணப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக செயலாளர் கூறினார்.

இதனால் மனித நுகர்வுக்கோ, விலங்குகளுக்கு உணவளிக்கவோ அதனை பயன்படுத்த முடியாதென  அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

வௌிநாடுகளிலிருந்து நச்சு பொருட்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கும் அதனை மனித நுகர்வுக்கு பயன்படுத்துவதற்கும் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் அவர் கூறினார்.

இவற்றை நாட்டுக்குள் அழித்துவிடாமல் இறக்குமதி செய்த நாட்டுக்கே மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment