கஜேந்திரகுமார் மற்றும் அதாவுல்லாவுக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Thursday, October 24, 2024

கஜேந்திரகுமார் மற்றும் அதாவுல்லாவுக்கு பிணை

தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸாரால் இன்று (24) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் கடந்த 17 ஆம் திகதி பேரணியை நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா மீது வழக்கு தொடரப்பட்டு இன்று (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 21 ஆம் திகதி நீதிமன்றத்தில் விடயங்கள் முன்வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (24) அவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது தலா 50,000 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment