அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளேன், ஓய்வூதியத்தையும் சமூக சேவைகளுக்காகவே பயன்படுத்தினேன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 2, 2024

அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளேன், ஓய்வூதியத்தையும் சமூக சேவைகளுக்காகவே பயன்படுத்தினேன் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

(எம்.மனோசித்ரா)

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓயவூதியம் முறையாக வழங்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட 94000 ஓய்வூதியத்தையும் சமூக சேவைகளுக்காகவே பயன்படுத்தினேன். அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015 க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென அரசு தெரிந்திருக்கவுமில்லை.

அதன் பின்னல் 94 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அதுதான் எனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியமாகும். அதன் பிறகு நான் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றும் வழங்கினேன். எனது சொந்த உபயோகத்திற்காக தனி கணக்கை திறந்து, பல சமூக சேவைகளுக்காக நான் அதைப் பயன்படுத்தினேன்.

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 14 வாகனங்களில் 7 வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளேன். தற்போது என்னிடம் 4 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பாதுகாப்புக்காகவும், ஏனைய இரண்டும் பயணம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குமாகும். 12 வருட அரசியல் வாழ்க்கையில் தனது செந்த செலவுக்காக அரசிடமிருந்து எந்த பணத்தையும் நான் பெறவில்லை.

எனது ஆட்சிக் காலத்தில் சிலரது தொடர்ச்சியான கோரிக்கைகளால் 12 ஆண்டுகளில் 4 வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கினேன். ஆனால் நான் அதனைப் பெறவில்லை. எனது ஊழியர்களுக்கும் நானே ஊதியங்களை வழங்குகின்றேன். மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களைக்கூட நானே செலுத்துகின்றேன். ஹெக்டர் கொப்பேடுவ உடன் நான் மாத்திரமே வாகனத்துக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.

முந்தைய ஆட்சியாளர்களுக்கு உணவுக்கான செலவுகள்கூட அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டன. அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைகளில் மாத்திரமே நாம் அரச செலவில் உணவுகளைப் பெற்றிருக்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment