முன்னாள் மாகாண சபை உறுப்பினர் K.L.M. பரீட் (JP) மீண்டும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லாவுடன் மீண்டும் இணைந்து கொண்டார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் K.L.M. பரீட் (JP) அண்மையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியினுடைய மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியைப் பெற்றுக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதற்கு தீர்மானித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (25) மாலை மீண்டும் அந்த முடிவை மாற்றி சிறீலங்கா முஸ்லீம் காங்கிரசில் மீண்டும் இணைந்ததோடு சஜித் பிரேமதாசாவினுடைய வெற்றியை உறுதி செய்வதற்காக கடுமையாக பாடுபடுவதாகவும் தொடர்ந்தும் முஸ்லீம் காங்கிரசினுடைய உறுப்பினராகவும் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வுடன் இணைந்து முழுமையாக செயற்படுவதாகவும் உறுதியளித்து கட்சியில் மீண்டும் இணைந்து கொண்டார்.
அத்தோடு கட்சிக்கு விசுவாசமாகவும், கட்சியினுடைய செயற்பாடுகளுக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பதாகவும் உறுதி வழங்கினார்.
முஸ்லீம் காங்கிரசினுடைய தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றவூப் ஹக்கீம், பரீட்டை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வர்த்தகர் மக்பூல் ஹாஜியார், முன்னாள் நகர சபை தவிசாளர் அஸ்பர் (JP), ஶ்ரீலங்கா ஹிரா பவுன்டேசன் செயலாளர் அஷ்ஷெய்க் மும்தாஸ் மதனி, முன்னாள் நகர சபை உறுப்பினர் ஜவாஹிர், ICST சேவைகள் பணிப்பாளர் மாஹிர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment