மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், உதவியாக ஒருவரை அழைத்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பார்வை குறைபாடுள்ள அல்லது நடக்க முடியாதுள்ள மற்றும் இதுபோன்ற இயலாமையுள்ளவர்களின் ஜனநாயக உரிமைகளை மதிக்கும் வகையில், இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர் அட்டையுடன் இவர்கள் ஒருவரை அழைத்துக் கொண்டு வாக்களிப்பு நிலையத்துக்கு வருவதற்கு அனுமதிக்கப்படுவர். இதற்கான அனுமதியை தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
இவ்வாறு அழைத்து வரப்படும் உதவியாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான வாக்காளர்களுக்கு உதவியாளர் வருவது தொடர்பில், ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் ஐந்தாவது பிரிவுக்கு அமைவாக வாக்காளர் உடற்தகுதி சான்றிதழை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உடற்தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்குத் தேவையான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட தேர்தல் அலுவலகம், கிராம உத்தியோகதர் அலுவலகம் அல்லது www.elections.gov.lk இணையத்தளத்தில் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
இவ்வாறு பெறப்படும் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, கிராம அலுவலரிடம் சமர்ப்பித்து சான்றிதழுக்காக அரசு மருத்துவ அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment