விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம் - News View

About Us

Add+Banner

Breaking

  

Sunday, July 7, 2024

demo-image

விமான நிலையத்திலேயே சாரதி அனுமதிப்பத்திரம்

24-6688a6fc01ddb
இலங்கை வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவைப்படும் இலகு ரக வாகன சாரதி அனுமதிப்பத்திரத்தை அவர்கள் நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்துக்குள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வழங்க மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வழங்க மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்திற்காக இந்த சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதிபத்திரங்களை பெறுவதற்கு இதுவரை வெரஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.

இதனால் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றமை தெரியவந்துள்ளது. இதனையடுத்தே இந்த தீர்மானத்தை மேற்படி திணைக்களம் எடுத்துள்ளது.

இதேவேளை இந்த நடைமுறை மூலம் அதிகளவான சுற்றுலாப் பயணிகளை கவர முடியும் என திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.

இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் இலங்கை வந்து வீசா பெறும் போதே அவருக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தின் தேவை தொடர்பாக அவரிடம் வினவப்படும். அவர் தேவையென்று தெரிவிக்கும் பட்சத்தில் உடனடியாக தற்காலிக இலகு ரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் இப்புதிய திட்டத்தினூடாக விமான நிலையத்தில் வழங்கப்படும்.

எப்படியிருப்பினும்,  இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்களின் நாடுகளில் வழங்கிய ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *