எஸ்.எம்.எம்.முர்ஷித்
தனது மகன் நூறு ரூபாய் பணத்தை திருடினான் என்ற குற்றத்திற்காக தகப்பனால் சூடு வைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மாவடிச்சேனை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி பயிலும் மாணவன் தனது தந்தையின் சேர்ட் பக்கட்டிலிருந்து நூறு ரூபாயை திருடிச் செலவளித்தார் என்ற குற்றத்திற்காகவே தகப்பனால் திங்கட்கிழமை இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் பற்றி அறிய வருவதாவது, தனது சேர்ட் பக்கட்டில் வைக்கப்பட்ட பணத்தில் நூறு ரூபா குறைந்துள்ளதை அறிந்த கோபமுற்ற தகப்பன் மகனுக்கு சூடு வைத்துள்ளார்.
அடுத்த நாள் பாடசாலைக்கு செல்ல முடியாதென்றும் தனக்கு கை வலியாகவுள்ளதாகவும் மகன் கூறிய நிலையில் பாடசாலைக்குச் செல்லா விட்டால் மீண்டும் சூடு வைப்பேன் என்று அச்சுறுத்தியதில் சிறுவன் பாடசாலை சென்றுள்ளான்.
நேற்று செவ்வாய்க்கழமை பாடசாலையில் மாணவன் சோகமாக இருந்த நிலையில், வகுப்பாசிரியர் மாணவனை விசாரித்தபோது மாணவன் நடந்த விடயத்தைத் தெரிவித்துள்ளான்.
மாணவனின் நிலையை அறிந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு அழைத்துச் சென்று முறையிட்டதன் பின்னர் வாழைச்சேனை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து மாணவனின் தந்தை கைது செயயப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளதாக வாழைச்சேனை மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment