(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பாலின சமத்துவம் சட்டமூலத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரண். சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை முறையாக செயற்படுத்தாமல் சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது. அத்துடன் ஒருசில உறுப்புரைகளை நிறைவேற்றுதாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன், மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்ற அமர்வின்போது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை சபைக்கு கொண்டுவருமாறு அறிவித்தார்.
அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட 'பாலின சமத்துவம்' சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை சபைக்கு அறிவிக்கிறேன்.
சட்டமூலத்தின் ஒரு சில உறுப்புரைகள் அரசியலமைப்பின் 12 வது பிரிவுக்கு முரணானது . இந்த மசோதாவின் உட்பிரிவு 2 இல் உள்ள 3, 4 உடன் இணைத்து வாசிக்க வேண்டிய 9, 10, 12, 14(1)(இ) மற்றும் 27(1)ஆகியவற்றுடன் முரணானது.
இந்த சட்டமூலத்தின் உட்பிரிவு 2 இல் உள்ள 3 மற்றும் 4 சரத்துக்கள் சேரத்து வாசிக்க வேண்டிய 9, 10, 12, 14(1)(இ) மற்றும் 27(1) ஆகியவற்றுடன் முரணானது. அத்துடன் 3, 4, 9,10 ஆகியன அரசியலமைப்புக்கு முரண்.மேலும் அவை மசோதாவின் பிற விதிகளிலிருந்து பிரிக்க முடியாதவை.
அரசியலமைப்பின் 83 மற்றும் அல்லது பிரிவு 84 இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகள் மற்றும் அரசியலமைப்பின் 80 வது பிரிவின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த சட்டமூலத்தை முழுமையாக ஒட்டு மொத்தமாக சட்டமாக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் இரண்டு பங்கிற்கு குறையாமல் இருக்க வேண்டும் (இல்லாதவர்கள் உட்பட), மற்றும் உயர் நீதிமன்றம் முன்வைத்துள்ள திருத்தங்களை முழுமையாக நிறைவேற்றாமல் இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற முடியாது.
உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள திருத்தங்களை செயற்படுத்தாமல் அந்த ஏற்பாடுகளை நிறைவேற்றுவதாயின் பெரும்பான்மை ஆதரவுடன் மக்கள் வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும்.
No comments:
Post a Comment