பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 18, 2024

பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவிப்பு

சிவில் உடையில் பொலிஸாரென கூறிக்கொண்டு யாராவது நபர்கள் அல்லது சொத்துகள் தொடர்பாக விசாரணை செய்யும் பட்சத்தில் அவர்களின் அடையாளத்தை உறுதி செய்யும் வகையில் அவர்களது தொழில் தொடர்பான அட்டையை கோரும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாக, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

இவ்வாறு அவர்களது தொழிலை உறுதிப்படுத்தும் அட்டையை கோருவதன் மூலம் குற்றச் செயல்களை கண்டறிந்து தடுக்க முடியுமெனவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. 

இது தொடர்பாக பொதுமக்களுக்கு அவசர பாதுகாப்பு எச்சரிக்கையை விடுத்துள்ள பொலிஸ் தலைமையகம் இவ்வாறு கூறியது.

மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவாமுல்ல சந்தியில் பொலிஸ் உத்தியோகத்தர்களென கூறிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர், சுமார் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் பணப் பையை திருடிக்கொண்டு தப்பிச் சென்றதுடன், இப்பொருட்கள் மீள பெற்றுக் கொள்ள வேண்டுமாயின் 35 ஆயிரம் ரூபாயுடன் மருதானை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் இவர்கள் கூறி விட்டுச் சென்றமை தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும், பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது.

No comments:

Post a Comment