இலங்கை கிரிக்கெட் அணியின் 'பயிற்றுவிப்பு ஆலோசகராக' கடமையாற்றிய இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திடம் சமர்ப்பித்துள்ளார்.
மஹேல ஜயவர்தன தனது பதவிக் காலத்தில் இலங்கை தேசிய அணியின் கட்டமைப்பை மறுசீரமைப்பதற்கும் முக்கியமான மாற்றங்களை அமுல்படுத்துவதற்கும் உதவி புரிந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மஹேல ஜயவர்தனவின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு வெற்றி பெறுவதற்கு வாழ்த்துகளையும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம்தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி அண்மைய போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றது.
குறிப்பாக அண்மையில் உலகக் கிண்ண ரி20 போட்டித் தொடரின் முதல் சுற்றிலேயே இலங்கை வெளியேறியமை பல்வேறு மட்டங்களிலும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்தது. இந்த நிலையில் மஹேல ஜயவர்தன தனது பதவி விலகல் கடிதத்தை கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment