குடிவரவு, குடியகல்வு திணைக்கள புதிய முத்திரைகள் அறிமுகமாகின - News View

About Us

About Us

Breaking

Friday, June 7, 2024

குடிவரவு, குடியகல்வு திணைக்கள புதிய முத்திரைகள் அறிமுகமாகின

நாட்டிலுள்ள சர்வதேச விமான நிலையங்களூடாக நாட்டுக்கு வரும் மற்றும் வௌியே செல்லும் பயணிகளின் கடவுச்சீட்டுகளில் பதவிடுவதற்கான DEPARTED, ARRIVED என்ற 02 இரப்பர் முத்திரைகளை குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவிக்கையில், ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இப்புதிய முத்திரை இடும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.

இதேபோன்று நாட்டின் தற்போது ஏனைய சர்வதேச விமான நிலையங்களிலும், புதிய முத்திரை நடைமுறை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் உள்நாட்டு வருகைக்காக நீல நிற முத்திரையையும் புறப்படும்போது பச்சை நிற முத்திரையையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

விமான நிலையங்களைத் தவிர, துறைமுகங்கள் மற்றும் பயணிகள் கப்பல்களுக்கும் இதேபோன்ற முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு துறைக்கும் மூன்று தனித்தனி முத்திரைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்தார்.

இப்புதிய முத்திரைகள் அறிமுகம் தொடர்பாக கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிடுகையில், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் இந்த நடைமுறை 1948 ஆம் ஆண்டு முதல் ஆரம்மானது. இது, தற்போது பல்வேறு தரப்பினரால் எளிதில் தவறாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டது.

No comments:

Post a Comment