தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் அரசியலமைப்பின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவே முடிவுகளை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எல்.ஏ.எம். ரத்நாயக்க, ஏனையவர்கள் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, செப்டெம்பர் 02 முதல் ஒக்டோபர் ஐந்தாம் திகதிக்குள் தேர்தல்கள் நடைபெறுமென தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர் தேர்தல்களில் வாக்களிப்பதற்காக இலங்கை வருவதற்காக முன்கூட்டியே விமானச்சீட்டுகளை பதிவு செய்து வைத்திருக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ, ஒக்டோபர் ஐந்தாம் திகதி தேர்தல் வாக்களிப்பு தினமென குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தேர்தல் ஆணைக்குழுவே இது குறித்து தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதித் தேர்தல் குறித்து தீர்மானிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்குமென தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், செப்டம்பர் 17ஆம் திகதி முதல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு உட்பட்ட எந்தவொரு நாளிலும் தேர்தல்கள் நடத்தப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment