மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, June 14, 2024

மருத்துவ துறைக்கு தெரிவான மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாறுக் ஷிஹான்

காரைதீவைச்சேர்ந்த மாணவன் எஸ்.அக்சயன் (வயது-20) வெள்ளிக்கிழமை (14) காலை லாகுகல பிரதேசத்திற்குட்பட்ட நீலகிரி ஆற்றில் நீராடுகையில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகரன் ஜீவரஞ்சனி தம்பதியினரின் ஒரேயொரு பிள்ளை அக்சயன் ஆவார். காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் இம்முறை மருத்துவத்துறைக்கு தெரிவான இரண்டு மாணவர்களுள் அக்சயனும் ஒருவராவார்.

இவர் அண்மையில் வெளியான G.C.E A/L 2023 (2024) பரீட்சையில் சித்திபெற்று மாவட்டத்தில் 23வது இடத்தில் மருத்துவத்துறைக்குத் தெரிவாகியிருந்தார்.

அவர் தனது குடும்பத்தோடு மூன்று நாட்களுக்கு முன்பு உகந்த மலை முருகன் ஆலயத்துக்குச்சென்று அங்கு தரித்து விட்டு வெள்ளிக்கிழமை (14) காலை வரும் பொழுது பொத்துவில், லாகுகலைக்கிடையிலுள்ள நீலகிரி ஆற்றிலே நீராடிய போது மூழ்கி மரணமானார்.

அவரது பூதவுடல் மேலதிக விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்காக லாகுகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்குத் தெரிவான எஸ்.அக்சயன் நீரில் மூழ்கி உயிரிழந்தார் செய்தி காட்டுத்தீ போல் பரவியது. முழுக்காரைதீவு பிரதேசமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

அம்மாணவனின் சடலம் லவுகலை வைத்தியசாலையில் @பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment