இந்த வருடமே ஜனாதிபதி தேர்தல் என்கிறார் ஆணையாளர் - News View

About Us

About Us

Breaking

Friday, June 21, 2024

இந்த வருடமே ஜனாதிபதி தேர்தல் என்கிறார் ஆணையாளர்

ஜனாதிபதி தேர்தலை இந்த வருடமே நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி தேர்தல் என்பது குறிப்பிட்ட காலக்கெடுவைக் கொண்ட தேர்தல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தேவை ஏற்பட்டால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனாதிபதி தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment