சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை பலி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 11, 2024

சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை பலி

வவுனியா, ஓமந்தை, புதிய வேலர் சின்னக்குளத்தில் வீட்டின் சுவர் வீழ்ந்து 2 மாத குழந்தை பலியாகியுள்ளது.

முல்லைத்தீவில் வசிக்கும் சிந்துஜன் அவரது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையுடன் வவுனியாவில் உள்ள தனது தங்கையின் வீட்டிற்கு கடந்த 7ஆம் திகதி வந்துள்ளார்.

நிகழ்வொன்றுக்காக வருகை தந்திருந்த நிலையில் தங்கையின் தற்காலிக வீட்டில் தங்கியிருந்த போது நேற்று முன்தினம் (09) மாலை சுமார் 5.00 மணியளவில் வீட்டில் உட்பகுயில் உள்ள கற்சுவர் குழந்தையின் மீது வீழ்ந்துள்ளது.

உடனடியாக வீட்டார் குழந்தையை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதிலும் குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment