நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாசனத்தின் இறுதி வரைபை கையளிக்கும் நிகழ்வு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதாரம் மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரன, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ, சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மயந்த திசாநாயக்க, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதி, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவரும், சர்வோதய அமைப்பின் தலைவருமான வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இந்நாட்டுக்கான பிரதிநிதி வைத்திய கலாநிதி அலகா சிம் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்த இறுதி வரைபு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் உப குழு மற்றும் அதன் நிபுணர்கள் குழுவினால் உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைய இந்த சாசனம் தெற்காசிய வலயத்தில் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள முதலாவது சாசனமாக அமைகின்றது.
இதற்கு அமைய நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சாசனத்தின் இறுதி வரைபை சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் நியமிக்கப்பட்ட உப குழுவின் தலைவர் வைத்திய கலாநிதி உபுல் கலப்பதியினால், சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் மயந்த திசாநாயக்கவிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சுகாதார அமைச்சின் அதிகாரிகள், ஏனைய துறைசார் நிபுணர்கள், சுகாதார ஒழுங்குபடுத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சுகாதார தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், நோயாளிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment