நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் ஜூன் மாதத்தின் முதல் 11 நாட்களில் மாத்திரம் 971 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி, இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 25,891 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் 9 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கையும் 14 ஆக அதிகரித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கை 5,624 ஆகும்.
மேலும், யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து 3,930 டெங்கு நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்திலிருந்து 2,487 டெங்கு நோயாளர்களும் கண்டி மாவட்டத்திலிருந்து 1,986 டெங்கு நோயாளர்களும் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து 1,441 டெங்கு நோயாளர்களும் களுத்துறை மாவட்டத்திலிருந்து 1,372 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment