காதலிக்கு பயம் காட்ட முற்பட்ட இளைஞன் மரணம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2024

காதலிக்கு பயம் காட்ட முற்பட்ட இளைஞன் மரணம்

வவுனியா, நந்திமித்திரகம பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் காதலிக்கு பயம் காட்ட கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் அது இறுகியதால் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன் வவுனியா போகஸ்வேவ பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞன் ஒருவரை காணவில்லை என மாமடுப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த இளைஞன் இன்றையதினம் (30) தூக்கிட்டு மரணித்த நிலையில் நந்திமித்திரகம பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். 

தனது 15 வயது காதலியை மிரட்டுவதற்காக கழுத்தில் கயிற்றை மாட்டிய நிலையில் குறித்த கயிறு இறுகி மரணித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment