மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் நேற்று (25) இரவு 11.00 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்ததோடு இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ்ஸொன்று பழுதடைந்ததன் காரணமாக ஏ9 வீதியில் 228 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.
இதன்போது பஸ்ஸில் வருகை தந்தவர்கள் இறங்கி பஸ்ஸின் பின்புறமாக நின்று கொண்டிருந்தபோது அதே திசையில் வருகை தந்த பாரவூர்தி ஒன்று குறித்த நபர்கள் மீதும், பஸ்ஸின் மீதும் மோதியதில் வீதியில் நின்ற நபர்கள் மூவர் பார ஊர்தியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு உடல்சிதறி பலியாகியுள்ளனர்.
பாரவூர்தி சாரதி மற்றும் பஸ்ஸில் பயணித்த இன்னொருவர் என இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாங்குளம் குரூப் நிருபர்
No comments:
Post a Comment