குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கு எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 14, 2024

குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் வயோதிபர்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் காய்ச்சல், இருமல், தொண்டைப் புண், மூக்கு வழிதல் அல்லது மூக்கடைப்பு, தசை அல்லது உடல் வலி, தலைவலி, சோர்வு போன்ற அறிகுறிகள் குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் பொதுமக்களை வலியுறுத்துகின்றனர்.

குழந்தைகள் மத்தியில் இது அதிகமாகக் காணப்படுவதால், பிள்ளைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு பெற்றோர்களை அறிவுறுத்துவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

“வழக்கமாக நவம்பர் முதல் பெப்ரவரி வரை மற்றும் ஏப்ரல் முதல் ஜூலை வரை காய்ச்சலின் இரண்டு உச்சநிலைகள் உள்ளன. இந்நேரத்தில், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியிலும் தொற்றுக்கள் கணிசமாக அதிகரித்துள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொற்றாளர் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி, இன்புளூவன்சா A முதன்மையானதாக காணப்படுகிறது. இருப்பினும், இன்புளூவன்சா B யும் பரவலாக உள்ளது. இது தொடர்பான அறிகுறிகள் தொடர்ந்தால், உடனடி மருத்துவ உதவியை நாடுவதே சிறந்தது.

இன்புளூவன்சா போன்ற நோய்களால் கர்ப்பிணித் தாய்மார்கள், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு, ராகமை, களுபோவில, நீர்கொழும்பு வைத்தியசாலைகள், லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலை மற்றும் தொற்று நோய் வைத்தியசாலை உட்பட 20 வைத்தியசாலைகளில் இன்புளூவன்சா போன்ற நோய் கண்காணிப்பை அதிகரிக்குமாறு சுகாதார அமைச்சின் செயலாளர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment