சிசு சரிய சேவைக்கு மேலும் 500 பஸ் வண்டிகள் இணைப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 14, 2024

சிசு சரிய சேவைக்கு மேலும் 500 பஸ் வண்டிகள் இணைப்பு

பாடசாலை மாணவர்களுக்கான சிசு சரிய பஸ் சேவைக்கு 2025 ஆம் ஆண்டு 500 பஸ்களை இணைத்து ‘சிசு சரிய’ பஸ்களின் எண்ணிக்கையை 2000 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுடன் கலந்துரையாடல் நடத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தற்போது, பாடசாலை மாணவர்களின் பருவச்சீட்டு மற்றும் மாணவர்களுக்காக பாரிய நிதியை மானியமாக செலவிட்டு வருகிறது. தற்போது நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக 1,500 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டுக்கென 2,000 மில்லியன் ரூபாவை இதற்காக திறைசேரி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பெருமளவிலான பாடசாலைகள் சிசு சரிய பஸ்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment