உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்திய மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை அவர் இன்று (14) தாக்கல் செய்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்தபோது பிரதமர் மோடியுடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி நட்டா உள்ளிட்டோர் உடன் இருந்தார்.
வாரணாசி தொதியில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகின்றன. இதன் பிரகாரம், 4 ஆம் கட்ட தேர்தல் நேற்று (13) நடைபெற்ற நிலையில், உத்தரப் பிரதேச வாரணாசி மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஜூன் முதலாம் திகதி நடைபெறவுள்ளது.
No comments:
Post a Comment