மூன்று மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர் : ஒருவர் சடலமாக மீட்பு, ஒருவரை காணவில்லை - News View

About Us

About Us

Breaking

Friday, May 17, 2024

மூன்று மீனவர்களை காப்பாற்றிய கடற்படையினர் : ஒருவர் சடலமாக மீட்பு, ஒருவரை காணவில்லை

(எஸ்.அஷ்ரப்கான்)

வாழைச்சேனையில் இருந்து கடந்த 12 ஆம் திகதி ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இயந்திர படகு ஒன்று உடைந்து அது நீரில் மூழ்கியதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் உயிருடனும், ஒருவரை சடலமாகவும் நேற்று (17) வெள்ளிக்கிழமை மாலை கடற்படையினர் மீட்டுள்ளனர். ஒருவர் காணாமல் போயுள்ளார் என வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நிந்தவூர் 9 ஆம் பிரிவு அரசடி மையவாடி வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய முகம்மது அலியார் இபிறாலெப்பை என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த 5 மீனவர்கள் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்காகக் கடந்த 12 ஆம் திகதி கடலுக்கு இயந்திர படகு ஒன்றில் சென்றுள்ளனர். ஆழ்கடலில் படகு உடைந்து நீரில் மூழ்கியதையடுத்து அதில் இருந்த மீனவர்கள் தப்பி கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர்.

கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தமையை நேற்று (17) வெள்ளிக்கிழமை மாலை கண்டனர். தத்தளித்துக் கொண்டிருந்த 3 மீனவர்களை உயிருடனும் ஒருவரை சடலமாகவும் மீட்டனர். ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இதில் உயிருடன் மீட்டகப்பட்ட ஒருவர் ஆபத்தான நிலையில் இருந்தமையையடுத்து அவரை திருகோணமலை கடற்படை முகாமிற்குக் கொண்டு சென்று வைத்தியசா லையில் அனுமதித்துள்ளனர். ஏனைய இருவரையும் மற்றையவரின் சடலத்தையும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு நேற்று இரவு கடற்படையினர் கொண்டுவந்து தம்மிடம் ஒப்படைத்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சடலம் வாழைச்சேனை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment