இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்னவை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் நேரில் சந்தித்து (2024.05.14) கலந்துரையாடியுள்ளார்.
இச்சந்திப்பின்போது திருகோணமலை மாவட்டத்தில் வரோதயநகர் பகுதில் இயங்கி வருகின்ற இலங்கை உயர் தொழிநுட்பவியல் கல்வி நிறுவனத்தின் வளாகத்தின் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இம்ரான் மகரூப் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்டத்திற்கு நேரில் கள விஜயம் செய்து வளாகத்தில் இருக்கின்ற பிரச்சினைகளை பார்வையிடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் விடுத்த வேண்டுகோளினை செவிமடுத்த நிறைவேற்றுப் பணிப்பாளர் அதாஉத செனவிரத்ன விரைவில் திருகோணமலை வளாகத்தினை பார்வையிட வருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
No comments:
Post a Comment