கனமழையினால் இந்தோனேசியாவில் 58 பேர் பலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, May 15, 2024

கனமழையினால் இந்தோனேசியாவில் 58 பேர் பலி

இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையினால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதனால் சுமத்ரா தீவில் வெள்ளத்தோடு மண்சரிவும் ஏற்பட்டுள்ளது. 

மேலும் எரிமலையும் வெடித்திருப்பதால், சாம்பலும் வெள்ளத்தில் கலந்து, பெரும்பாலான இடங்கள் சேறும் சகதியுமாக காட்சியளிக்கின்றன.

சுமத்ரா மாகாணத்தில் 4 மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தில் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். 

இந்த நிலையில் இந்தோனேசியாவில் கனமழை - வெள்ளத்துக்கு 58 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலரை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகிறது. மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment