இணையத்தில் அழகுக்கலை நிலையத்தில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி கொழும்புக்கு அழைத்து வரப்பட்ட 16 வயது சிறுமியை மசாஜ் நிலையம் ஒன்றுக்கு விற்பனை செய்த நபர் உட்பட மூவர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதாக கூறப்படும் மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் மற்றும் மசாஜ் நிலைய கட்டிடத்தின் உரிமையாளர் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தலவத்துகொடை வீதியில் அமைந்துள்ள மசாஜ் நிலையமொன்றில் 16 வயதான சிறுமியொருவர் பணி புரிவதாக மிரிஹான பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து மகளிர் பணியகத்தின் அதிகாரிகளுடன் குறித்த மசாஜ் நிலையத்திற்கு சென்று சோதனையிட்டனர்.
அங்கிருந்த சிறுமியிடம் நடத்திய விசாரணையில் முகநூல் மூலம் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும், அதன்படி இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்புகொண்டு தன்னிடம் வேலை உள்ளதாக கூறியதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர், குறித்த சிறுமியை குறித்த நபர் சந்தித்து தலவத்துகொட பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சிறுமியை அழைத்துச் சென்ற நபர், மசாஜ் நிலையத்தின் முகாமையாளர் என கூறப்படும் 23 வயதுடைய பெண், மசாஜ் நிலைய கட்டிடத்தின் உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment