இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய மியன்மார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 17, 2024

இலங்கை மீனவர்கள் 15 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய மியன்மார்

மியன்மார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கை மீனவர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது.

மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பரில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 15 இலங்கை மீனவர்கள் மியன்மார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்ததா தெரிவித்து கைது செய்யப்பட்டதோடு, அவர்களுக்கு அந்நாட்டு நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment