யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையை உரிய அனுமதியின்றி பயன்படுத்தினால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 14 ஆம் திகதி தொடக்கம் 16ஆம் திகதி வரையிலான மூன்று தினங்கள் நடைபெறவுள்ளன.
அதன்போது, ஒளிப்பட, வணிக மற்றும் விற்பனை நிலையங்களினால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இலட்சினையானது வியாபார நோக்கில் உரிய அனுமதிகள் எவையுமின்றி பொது வெளிகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
அவ்வாறான செயற்பாடுகள் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படக் கூடிய குற்றமொன்றாகும்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இலட்சினையானது பல்கலைக்கழக மூதவையின் (Senate) அனுமதியுடனே உபயோகிக்கப்படுதல் வேண்டும். ஆகவே அவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
மேலதிக விபரங்களிற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு நேரில் வந்தோ, 021 221 8100 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ அல்லது info@univ.jfn.ac.lk எனும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.
யாழ்.விசேட நிருபர்
No comments:
Post a Comment