தியத்தலாவையில் இன்று (21) இடம்பெற்ற ‘Fox Hill SuperCross 2024’ பந்தய நிகழ்வின்போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 21 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
பந்தயத்தில் பங்குபற்றிய கார் ஒன்று ஓட்டப் பாதையை விட்டு விலகி கடுப்பாட்டை இழந்து பார்வையாளர் பகுதிக்குள் சென்றதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
விபத்தில் மரணித்தவர்களில் போட்டி ஒழுங்கமைப்பாளர்கள் 4 பேர் மற்றும் சிறுமி ஒருவர் உள்ளிட்ட 7 பேர் உள்ளடங்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனைத் தொடர்ந்து போட்டியின் மீதமுள்ள போட்டிகள் இரத்து செய்யப்படுள்ளன.
Sri Lanka Automobile Sports (SLAS) ஆதரவுடன், Sri Lanka Military Academy Diyatalawa ஏற்பாடு செய்துள்ள ‘Fox Hill SuperCross’ இன் 28வது பதிப்பு இன்று தியத்தலாவவில் ஆரம்பமானது.
No comments:
Post a Comment