டிக்கெட் வாங்க அலைமோதும் மக்கள் : தேசிய அடையாள அட்டைக்கு இரண்டு மட்டுமே - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 21, 2024

டிக்கெட் வாங்க அலைமோதும் மக்கள் : தேசிய அடையாள அட்டைக்கு இரண்டு மட்டுமே

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான T20 ஓவர் சர்வதேசப் போட்டி இன்று (21) தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் போட்டியை காண அதிகளவிலான மக்கள் டிக்கெட் வாங்க வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தம்புள்ளை பிரதேச செயலக வளாகத்தில் டிக்கெட் விற்பனை கவுன்டர்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், 2000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இலங்கை கிரிக்கெட் அதிகாரி ஒருவர், ​​மைதானத்தில் பார்வையாளர்களுக்கான இடவசதியை கருத்தில் கொண்டு, இந்தளவான டிக்கெட்டுகளை விற்பனை செய்ய முடிவு செய்ததாக கூறினார்.

இதற்கிடையில், தேசிய அடையாள அட்டைக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுவதாக பார்வையாளர்கள் சிலர் குற்றம் சாட்டினர்.

“கருப்புச் சந்தை” சூழ்நிலையைத் தவிர்க்க இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment