பசறை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் கசிப்பு அருந்தியதால் சுகயீனமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த மாணவன் கடந்த 14 ஆம் திகதி அன்று பாடசாலையில் இருக்கும்போது திடீரென சுகயீனமடைந்து வாந்தி எடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஆசிரியர்கள் மாணவனிடம் விசாரிக்கையில் தான் பாடசாலைக்கு அருகில் உள்ள கடையொன்றில் பானம் ஒன்றை அருந்தியதாக தெரிவித்துள்ளார்.
சுகயீனமடைந்த மாணவன் பசறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் கசிப்பு அருந்தியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இந்த மாணவன் மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment