ஆழ்கடலில் மூழ்கி பிரதமர் மோடி வழிபாடு - News View

About Us

About Us

Breaking

Monday, February 26, 2024

ஆழ்கடலில் மூழ்கி பிரதமர் மோடி வழிபாடு

குஜராத்தின் துவாரகாதீசர் கோயிலில் நேற்று (25) வழிபாடு நடத்திய பிரதமர் மோடி பின்னர் ஸ்குபா டைவிங் உபகரணங்களுடன் ஆழ்கடலில் மூழ்கி கிருஷ்ணர் கால துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தார்.

குஜராத்தின் துவாரகா நகரில் துவாரகாதீசர் கோயில் அமைந்துள்ளது. இது திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். 

பிரதமர் மோடி நேற்று துவாரகாதீசர் கோயிலில் வழிபாடு நடத்தினார். பின்னர் அவர் ஸ்குபா டைவிங் உபகரணங்களுடன் ஆழ்கடலில் மூழ்கி கிருஷ்ணர் கால துவாரகா நகரில் பிரார்த்தனை செய்தார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “ஆழ்கடலில் மூழ்கியுள்ள துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்தது மிகவும் தெய்வீக அனுபவம் ஆகும். 

ஆன்மிக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் கிருஷ்ணர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment