நாட்டில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, February 23, 2024

நாட்டில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள்

நடளாவிய ரீதியில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று அடையாளப்படுத்தி அவர்கள் இருக்கும் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டுள்ளது

இந்நிலையில், இலங்கையின் சுகாதார அமைப்பிற்குள், ஒரு நோயாளிக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் திறனும், பொறுப்பும் மற்றும் அதிகாரமும் ஒரு வைத்தியருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு செய்யக்கூடிய திறனோ அல்லது அதிகாரமோ வேறு யாருக்கும் இல்லை.

நோயாளிக்கு வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல்லது ஆய்வக சோதனைக்கு மட்டுமே உட்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment