அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை : நாளை 2ஆவது போட்டி தொடர் - News View

About Us

About Us

Breaking

Sunday, February 18, 2024

அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை : நாளை 2ஆவது போட்டி தொடர்

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20 ஓவர் கிரிக்கெட் தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அந்த நிறுவனம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

அத்துடன், தம்புள்ளை மற்றும் கொழும்பில் நிறுவப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1ஆவது T20 ஓவர் போட்டியை காண 18,000 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது T20 ஓவர் போட்டி நாளை (19) நடைபெறவுள்ளதுடன் 3ஆவது T20 ஓவர் போட்டி 21ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment