ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் CID யின் தலையீட்டை அறிந்திருக்கவில்லை : இரகசிய வாக்குமூலம் தொடர்பில் நீதிபதி ரங்க திஸாநாயக்க சாட்சியம் - News View

About Us

About Us

Breaking

Friday, January 19, 2024

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் CID யின் தலையீட்டை அறிந்திருக்கவில்லை : இரகசிய வாக்குமூலம் தொடர்பில் நீதிபதி ரங்க திஸாநாயக்க சாட்சியம்

பிர­பல மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ரான வழக்கில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளான‌, புத்­தளம், அல் சுஹை­ரியா மத்­ரஸா பாடசாலையின் முன்னாள் மாண­வர்கள் எனக் கூறப்­படும் மொஹம்மட் மலிக், மொஹம்மட் பெளஸான் ஆகி­யோ­ருக்கு, சட்டத்த­ர­ணி­களை சி.ஐ.டி. அதி­கா­ரி­களே ஏற்­பாடு செய்து கொடுத்தமை தொடர்பில் அறிந்­தி­ருந்தால், ஒரு­போதும் அவ்விருவரின் வாக்கு மூலங்­க­ளையும் தான் பதிவு செய்­தி­ருக்க மாட்டேன் என மேல் நீதி­மன்ற நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க புத்­தளம் மேல் நீதி­மன்றில் சாட்­சியம் அளித்தார்.

16 ஆம் திகதி புத்­தளம் மேல் நீதி­மன்றில் நடந்த வழக்கு விசாரணைகளின் இடையே, இந்த விட­யத்தை பிர­தி­வாதி தரப்பின் சட்­டத்­த­ர­ணி­க­ளான அசித் சிறி­வர்­தன மற்றும் சமிந்த அத்துகோரளவின் குறுக்கு விசா­ர­ணையின்போது நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க வெளிப்­ப­டுத்­தினார்.

உயிர்த்­த­ ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது சதி செய்­தமை, சமூகங்களிடையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள வழக்கு 16 ஆம் திகதி நீதி­பதி நதீ அபர்னா சுவந்­து­ரு­கொட முன்­னி­லையில் புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசாரணைக்கு வந்­தது.

இதன்­போது, பிணையில் இருக்கும் சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 2 ஆம் பிர­தி­வா­தி­யான அல் சுஹை­ரியா மத்­ரசா பாடசாலை அதிபர் சகீல் கான் ஆகியோர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

முதல் பிர­தி­வா­தி­யான சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் சார்பில், ஜன­ாதிபதி சட்­டத்­த­ரணி பர்மான் காசிம் மற்றும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

2 ஆம் பிர­தி­வா­தி­யான அதிபர் சகீல்கான் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மையில் ஹபீல் பாரிஸ் உள்ளிட்ட‌ குழு­வினர் ஆஜ­ரா­கினர்

வழக்குத் தொடுநர் சட்டமா அதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் லக்­மினி கிரி­ஹா­க­மவும் சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்­வாவும் ஆஜ­ரா­கினர்.

அத்­துடன் இவ்­வ­ழக்கு விசா­ர­ணை­களை கண்­கா­ணிக்க ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள், அம­ரிக்க தூத­ரக அதி­கா­ரிகள் நீதி­மன்றில் பிரசன்­ன­மா­கி­யி­ருந்­தமை விஷேட அம்­ச­மாகும். இத­னை­விட இந்த வழக்குத் தவ­ணையின்போது, சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து, வழக்கை கண்­கா­ணிக்க கத்­தோ­லிக்க மத குருமார், அருட் தந்­தைமார் மற்றும் அருட் சகோதரிகள் என பலரும் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திகதிக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்றுக் கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழிவினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து கூறப்படும் அச்­சட்­டத்தின் 3 (அ) பிரிவின் கீழ் தண்­டனைக் குறிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்தோலிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை காண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலைமையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) எச் பிரி­வுடன் இணைத்து நோக்கப்­படும் அச்­சட்­டத்தின் 2 (2) 11 பிரிவின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடை சட்ட ஏற்­பா­டுகள் பிரகாரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் - இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் சுமத்தி சிவில் அர­சியல் உரி­மைகள் குறித்­தான சர்­வ­தேச இணைக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3 (1) ஆம் உறுப்­பு­ரை­யுடன் இணைத்து பார்க்­கப்­படும் அச்­சட்­டத்தின் 3 (3) ஆம் உறுப்­பு­ரையின் கீழ் குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதிராகவும், அதற்கு உதவி ஒத்­தாசை புரிந்­தமை தொடர்பில் மத்­ரஸா அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீ­லுக்கு எதி­ரா­கவும் குற்றம் சுமத்தப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், அரச தரப்பின் பிர­தான சாட்­சி­யா­ளர்­க­ளான மலிக் மற்றும் பெளஸான் ஆகியோர் கோட்டை நீதி­வா­னுக்கு கடந்த 2020 மே 12 ஆம் திகதி பீ 13101/19 எனும் வழக்குக் கோவையின் கீழ் குற்­ற­வியல் நடை­முறை சட்டக் கோவையின் 127 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் வழங்­கிய இர­க­சிய வாக்கு மூலத்தின் சுயா­தீனத் தன்மை தொடர்பில் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கான சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதன்­படி அப்­போது கோட்டை நீதி­வா­னாக இருந்த தற்­போ­தைய பலபிட்­டிய மேல் நீதி­மன்ற நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க சாட்­சியம் வழங்க அழைக்­கப்­பட்ட நிலையில், சிரேஷ்ட பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன சில்­வாவின் நெறிப்­ப­டுத்­தலில் அவர் சாட்சியமளித்தார்.

சி.ஐ.டி.யின் விஷேட விசா­ரணைப் பிரிவு இல. ‍ 3 இன் பொறுப்­ப­தி­காரி பிர­தான பெண் பொலிஸ் பரி­சோ­தகர் தீபானி மெனிகே நீதி­மன்றில் நகர்த்தல் பத்­திரம் ஊடாக முன் வைத்த கோரிக்­கைக்கு அமைய குறித்த இரு சாட்­சி­யா­ளர்­களின் வாக்கு மூலம் பதிவு செய்யப்ப‌ட்டதாக நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க இதன்­போது கூறினார்.

‘சாட்­சியம் எனது உத்­தி­யோ­க­பூர்வ அறையில் பதிவு செய்­யப்­பட்­டது. முதலில் மலிக் எனும் சாட்­சி­யா­ளரின் சாட்­சியம் பதிவு செய்யப்பட்டது. அவ­ருக்கு சிங்­களம் நன்­றாக தெரியும். அத­னையும் நான் பதி­விட்டேன். எனவே அவ­ருக்கு மொழி­பெ­யர்ப்­பாளர் அவ­சியம் ஏற்­ப­ட­வில்லை. வாக்கு மூலம் பெறும் போது அதனை தட்­டச்சு செய்தவர் தவிர மூன்றாம் நபர் இருக்­க­வில்லை.

ஆனால் விஷேட நிலைமை ஒன்று இருந்­தது. அதா­வது சாட்சியாளர்கள் இரு­வரும் 18 வய­துக்கும் குறை­வா­ன­வர்கள் என்பதால் அவர்­களின் சட்­டத்­த­ர­ணிகள் உட­னி­ருக்க அனுமதிக்கப்பட்­டார்கள். அதற்­கான அனு­ம­தியை நான் வழங்கினேன்.

பெளசான் எனும் சாட்­சி­யா­ள­ருக்கு சிங்­களம் தெரி­யா­ததால் மொழி பெயர்ப்­பாளர் ஒரு­வரின் உத­வியும் பெறப்­பட்­டது.

இதன்­போது மனோ­கர டி சில்வா, துஷிகா நாமலி சில்வா ஆகிய சட்டத்­த­ர­ணி­களே உட­னி­ருந்­தனர்.’ என நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க சாட்­சி­ய­ம­ளித்தார்.

இத­னை­ய­டுத்து அவ­ரிடம் குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது. முதலில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன குறுக்கு விசாரணை செய்தார்.

முதலில் குறித்த வாக்கு மூலங்கள் சுயா­தீ­ன­மாக வழங்கப்படுகின்ற‌து என்­பதை உறுதி செய்ய எடுக்­கப்­பட்ட நடவடிக்கை தொடர்பில் அவர் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த நீதி­பதி ரங்க திசா­நா­யக்க ‘ குற்­ற­வியல் நடைமுறை சட்டக் கோவையின் 127 ஆம் அத்­தி­யாயம் பிர­காரம் இரு வகை­யான வாக்கு மூலங்­களை நாம் பதிவு செய்வோம். ஒன்று, குற்றம் செய்­த­தாக சந்த்­தேக நபர் ஒருவர் வழங்கும் ஒப்­புதல் வாக்கு மூலம். மற்­றை­யது விடயம் ஒன்­றினை அறிந்த சந்­தேக நபர் அல்­லாத ஒருவர் வழங்கும் வாக்கு மூலம். ஒப்­புதல் வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்யும் போது பின்­பற்றும் மிகக் கவ­ன­மான நடைமுறைகளை சந்தேக நபர் அல்­லாத ஒருவர் வழங்கும் சாதா­ரண வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்யும் போது பின்­பற்ற மாட்டோம்‘ என தெரி­வித்தார்.

இதன்­போது குறித்த இரு சாட்­சி­யா­ளர்­களும் இர­க­சிய வாக்கு மூலம் அளித்த போது, அவர்­க­ளுக்­காக ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் இரு­வரும் அவர்­க­ளுக்கு சி.ஐ.டி.யினரால் ஏற்­பாடு செய்து கொடுக்கப்பட்டவர்கள் என தெரி­யுமா? என குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்­டது.

அதற்கு பதி­ல­ளித்த நீதி­பதி ரங்க திஸா­நா­யக்க, சி.ஐ.டி.யினர் ஏற்­பாடு செய்து கொடுத்­த­தாக தெரி­யாது. சாதா­ர­ண­மாக ஒரு­வ­ருக்­காக சட்டத்­த­ரணி ஒருவர் ஆஜ­ராகும் போது, அவர்­களே சட்­டத்­த­ர­ணியின் சேவையை பெற்­றுக்­கொண்­டுள்­ள­தா­கவே நாம் நம்­புவோம். உண்மையில் சி.ஐ.டி.யினரே சட்­டத்­த­ர­ணி­களை ஏற்­பாடு செய்துகொ­டுத்­தி­ருந்­த­மையை நான் அறிந்தி­ருந்தால், அவர்கள் இருவரின் வாக்கு மூலங்களை நான் பதிவு செய்திருக்கவே மாட்டேன்.
உண்மையில் இந்த வாக்கு மூலங்களை நீதிவான் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதனை சி.ஐ.டி.யினரே செய்திருக்கலாம். ‘ என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த இரகசிய வாக்கு மூலங்கள் வழங்கப்பட்ட பின்னர், அதில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு விசாரணைகளை செய்ய உத்தரவிட்டதாகவும், அவ்விசாரணைகளில் திருப்தியான அறிக்கை எதுவும் கிடைக்கவில்லை எனவும் நீதிபதி ரங்க திசாநாயக்க குறிப்பிட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு மேலதிக சாட்சி விசாரணைகளுக்காக எதிர்வரும் மார்ச் முதலாம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. குறித்த திகதியில் வழக்கின் 24,31,38 ஆம் இலக்க சாட்சியாளர்களுக்கு மன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

Vidivelli

No comments:

Post a Comment