கோழிக்கோடு புகையிரத நிலையமாக மாறிய மருதானை புகையிரத நிலையம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 10, 2024

கோழிக்கோடு புகையிரத நிலையமாக மாறிய மருதானை புகையிரத நிலையம்

கொழும்பு, மருதானை புகையிரத நிலையம் கோழிக்கோடு புகையிரத நிலையமாக கட்சியளித்திருந்ததை நேற்றையதினம் (09) அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

காலனித்துவ ஆட்சிக் காலத்தில், இந்தியாவின் கேரளாவில் இருந்த கோழிக்கோடு புகையிரத நிலையத்தின் தோற்றத்தை மருதானை புகையிரத நிலையம் தோற்றுவிப்பதால், திரைப்பட காட்சியொன்றை பிடிப்பதற்காக, நேற்றையதினம் (09) படக்குழுவொன்று அங்கு அதன் காட்சி அமைப்புகளை செய்திருந்தது.

இதற்காக கோழிக்கூடு புகையிரத நிலையம் என அமைக்கப்பட்ட பெயர் கல்சுவர், அக்காலத்து இந்திய பொலிஸாரின் உடையில் காவலுக்கு நிறுத்தப்பட்ட பொலிஸார் மற்றும் அப்போது பயன்படுத்தப்பட்ட புகையிரதம உள்ளிட்ட விடயங்கள் அங்கு காட்சியமைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment